பொதுச்சந்தை கட்டட தொகுதியினை தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம்
“Clean Sri Lanka” தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக இன்றையதினம் வவுனியா பொதுச்சந்தை கட்டடத்தொகுதியானது மக்களின் சுகாதாரமான பாவனையினை நோக்காக கொண்டு விசேட தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதன் போது குறித்த கட்டடத்தொகுதியானது முழுமையாக சுத்தம் செய்யப்பட்டதுடன், தேவையற்ற வகையில் காணப்பட்ட கழிவுகள் அனைத்தும் இன்றையதினம் அகற்றப்பட்டது.