பெண் சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனை

மகளிர் தினத்தை முன்னிட்டு 07.03.2025 நகரசபை திறந்தவெளி அரங்கில் பெண் சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது

வவுனியா நகர சபையினால் சந்தை சுற்றுவட்ட வீதியில் அமைந்திருந்த வீதியோர வியாபாரங்கள் அகற்றப்பட்டமை தொடர்பான அறிவித்தல்

வவுனியா நகர சபையினால் சந்தை சுற்றுவட்ட வீதியில் அமைந்திருந்த வீதியோர வியாபாரங்கள் அகற்றப்பட்டமை தொடர்பான அறிவித்தல்
வவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியிலும் பொதுச்சந்தையினை அண்மித்தும் அமைந்திருந்த வீதியோர மரக்கறி வியாபாரங்களால் அண்மைக்காலமாக மக்களின் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வந்ததுடன், அப்பகுதிகளில் தொடர்ச்சியாக வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமையினை கருத்திற்கொண்டும், குறித்த வியாபாரிகளால் பொது மக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கழிவு நீர் வடிகாலமைப்பிற்கு அருகில் மரக்கறி வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வந்தமையினை கருத்திற்கொண்டும், மேலும் இவ்விடயம் தொடர்பில், பொது மக்களிடமிருந்தும், சமூக ஆர்வலர்களிடமிருந்தும் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்று வந்த முறைப்பாடுகளுக்கமைவாகவும் குறித்த வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி அனுமதியற்ற முறையில் இயங்கி வந்த தற்காலிக வீதியோர மரக்கறி வியாபாரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவருகின்றன.
இனிவரும் காலங்களில் மக்களின் பொதுப்போக்குவரத்து மற்றும் பொதுச்சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலினை விளைவிக்கும் வகையில் செயற்படும் அனைத்து வீதியோர வியாபாரங்கள் தொடர்பில் நகர சபையினரால் தொடர் கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், குறித்த வியாபாரங்களுக்கு எதிராக நகர சபை கட்டளை சட்டத்திற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

நகர சபையினால் நகர சபைக்குட்பட்ட வீதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீதி பராமரிப்பு பணிகள் (Road Marking and Pedestrian Cross Marking)

நகர சபையினால் நகர சபைக்குட்பட்ட வீதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீதி பராமரிப்பு பணிகள் (Road Marking and Pedestrian Cross Marking)

பொதுச்சந்தை கட்டட தொகுதியினை தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம்

பொதுச்சந்தை கட்டட தொகுதியினை தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம்

“Clean Sri Lanka” தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக இன்றையதினம் வவுனியா பொதுச்சந்தை கட்டடத்தொகுதியானது மக்களின் சுகாதாரமான பாவனையினை நோக்காக கொண்டு விசேட தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது. இதன் போது குறித்த கட்டடத்தொகுதியானது முழுமையாக சுத்தம் செய்யப்பட்டதுடன், தேவையற்ற வகையில் காணப்பட்ட கழிவுகள் அனைத்தும் இன்றையதினம் அகற்றப்பட்டது.

“Clean Sri Lanka” தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக வவுனியா நகர சபையின் 2025 ஆம் வருடத்தில் கடமைகளை ஆரம்பித்தல்

“Clean Sri Lanka” தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்ததாக வவுனியா நகர சபையின் 2025 ஆம் வருடத்தில் கடமைகளை ஆரம்பித்தல்
பொது நிர்வாகச் சுற்றறிக்கை 22/2024 இற்கு அமைவாக 2025 ஆம் ஆண்டிற்கான வவுனியா நகர சபையின் கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வானது இன்றைய தினம் ஜனவரி 01 ஆம் திகதி அனைத்து அலுவலர்களின் பங்கேற்புடனும் முன்னெடுக்கப்பட்டது.
Clean Sri Lanka பிரசைகளை சத்தியப் பிரமாணம் / உறுதிமொழி
நாட்டு மக்கள் அனைவரினதும் உள்ளங்கள் புதிய எதிர்பார்ப்புகளுடன் நிரம்பியுள்ள வேளையில், நாம் 2025 ஆம் வருடத்தில் காலடி எடுத்து வைக்கின்றோம்.
நாடு என்ற ரீதியில் நாங்கள் தவறவிட்ட சகவாழ்வு, சமூக, பொருளாதார அபிவிருத்தி, நவீனத்துவம் மற்றும் கலாசார வாழ்வு என்பவற்றை மீண்டும் அடைவதே எமது எதிர்ப்பார்ப்பாகும்.
எமது நாட்டை மீளக் கட்டியெழுப்பும் சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்பதை நாம் நன்கு அறிவோம்.
“க்ளீன் ஸ்ரீ லங்கா” என்பது வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் கட்டியெழுப்புவதற்கு அத்தியவசியமான, கூட்டு அர்ப்பணிப்புடன் செயலாற்றும், அத்துடன் பொறுப்புக்கூறும் தொழிற்பாடாகும். இன, மத அல்லது அரசியல் பேதமின்றி இத்தேசிய நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்து செயற்படுவதற்கு உறுதிமொழி அளிக்கின்றோம்.
சகல நடவடிக்கைகளிலும், அனைத்து பிரசைகள் உயர் சமூக அந்தஸ்தை அடைவதற்கு உறுதுணையாக அமைகின்ற, ஒற்றுமை, பொறுப்புக்கூறல், சிக்கனம், வெளிப்படைத்தன்மை மற்றும் சமத்துவம் ஆகிய விடயங்களை முன்னுதாரணமாகக் கடைப்பிடிப்பதற்கும், அத்தர நியமங்களை பாதுகாத்த வண்ணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.
அபிமானம் கொண்ட இலங்கைப் பிரசைகள் என்ற வகையில் அழகானதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், வளமான வாழ்க்கையை அடைவதற்கும், நேர்மையுடனும் ஒரே நோக்கத்துடனும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவோம் என்பதாக சத்தியப் பிரமாணம் செய்கின்றோம்./ உறுதிமொழிகின்றோம்.

வரைவு வரவு செலவு திட்டத்தினை இறுதிப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்

வவுனியா நகர சபையின் 2025 ஆம் ஆண்டிற்கான வரைவு வரவு செலவு திட்டத்தினை இறுதிப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் .
காலம் : 12.12.2025
நேரம் : மு.ப 10.00 மணி
இடம் : நகர மண்டபம், வவுனியா நகர சபை
2025 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தினை இறுதிப்படுத்துதல் தொடர்பான இறுதி கலந்துரையாடலானது நாளைய தினம் 12.12.2024 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு நகர சபையின் நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
ஆகவே, இக்கலந்துரையாடலில் வவுனியா நகர சபையின் ஆளுகைக்குட்பட்ட பொதுமக்கள், பொது அமைப்புக்களின்; பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரச நிறுவனங்களின் வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், சன சமூக நிலைய உறுப்பினர்கள், வர்த்தகர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்கள், விசேட தேவைக்குட்பட்டோர், பொருளாதார ரீதியாக பாதிப்புற்றோர், தொழில் முனைவோர், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்துகொண்டு வரவு செலவு திட்டத்தினை இறுதிப்படுத்தலுக்கான தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை வழங்கியுதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி
செயலாளர்
வவுனியா நகர சபை

தேசிய வாசிப்பு மாத பாிசளிப்பு விழா- 2024

தேசிய வாசிப்பு மாத பாிசளிப்பு விழா- 2024

நகரசபை பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பாிசளிப்பு விழா 30.11.2024 சனிக்கிழமை, மு.ப. 9.00 மணிக்கு நகரசபை கலாசார மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது. இந் நிகழ்வானது சபையில் செயலாளர் திரு. அ.பாலகிருபன் அவர்கள் தலைமையில். பிரதமவிருந்தினராக திரு. இ. பிரதாபன் (பிரதேச செயலாளர்- வவுனியா) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. தெ. ரதீஸ்வரன் (உள்ளூராட்சி உதவி ஆணையாளர்- வவுனியா) அவா்களும், ஏனைய சபைகளின் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், வாசகர்கள், மற்றும் பெற்றோர், மாணவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

வவுனியா நகர சபையின் 2025 ஆம் ஆண்டிற்கான வரைவு வரவு செலவுத்திட்டம் பொது மக்களின் பார்வைக்கு

வவுனியா நகர சபையின் 2025 ஆம் ஆண்டிற்கான வரைவு வரவு செலவுத்திட்டம் பொது மக்களின் பார்வைக்கு

வவுனியா நகர சபையின் 2025 ஆம் ஆண்டிற்கான வரைவு வரவு செலவுத்திட்டமானது 02.12.2024 ஆம் திகதியிலிருந்து 11.12.2024 ஆம் திகதி வரை நகர சபை அலுவலகம், பொது நூலகம் மற்றும் சன சமூக நிலையங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வரவு செலவு திட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்காக முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், சபைக்குரிய வருமானங்கள் மற்றும் செலவீனங்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமையினால், பொது மக்களாகிய நீங்கள் இவ் வரவு செலவு திட்டத்தினை அலுவலக நாட்களில் பார்வையிட்டு தங்களது அபிப்பிராயங்களை
செயலாளர்
நகர சபை
வவுனியா
எனும் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ 12.12.2024 ஆம் திகதிக்கு முன்னர் தெரிவிக்க இயலும் என்பதனை அறியத்தருகின்றோம்.
வரவு செலவு திட்டத்தினை PDF வடிவில் கீழ்வரும் இணைப்பினை தொடர்வதன் மூலம் மும்மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
————————————————————————-
📌வருமானம் (ரூபா.)
**************
சபையின் சொந்த வருமானம் 195,842,934.64
நன்கொடைகள் மற்றும் வருமான மீள் நிரம்பல்கள் 132,668,043.00
மூலதன பெறுகைகள் 5,000,000.00
எதிர்பார்க்கப்படும் மொத்த வருமானம் 333,510,977.64
📌செலவீனம் (ரூபா.)
**************
மீண்டெழும் செலவுகள் 281,360,615.00
மூலதன செலவுகள் 52,150,000.00
எதிர்பார்க்கப்படும் மொத்த செலவீனம் 333,510,615.00

வவுனியா நகரசபை பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பாிசளிப்பு நிகழ்வு

வவுனியா நகரசபை பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பாிசளிப்பு நிகழ்வு – 2024.11.30
வாசகர்கள் , மாணவர்கள், மற்றும் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றோம்.

சீரற்ற காலநிலை தொடர்பான முக்கிய அறிவித்தல்

சீரற்ற காலநிலை தொடர்பான முக்கிய அறிவித்தல்

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்வதற்கும் துரித நடவடிக்கைகளை எடுக்கத்தக்கவாறு வவுனியா நகர சபையானது 24 மணி நேர சேவையினை வழங்குவதற்கு ஏற்றவாறு தயார்நிலையில் உள்ளது.
அந்தவகையில் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பொது பாதைகளை தடை செய்யக்கூடியவாறு ஏற்படும் வெள்ளம் மற்றும் பொது மக்களின் பயணங்களுக்கு இடையூறாக வீதிகளில் விழும் மரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்வதுடன், இவ்வாறாக அனர்த்தங்கள் ஏற்படுமிடத்து நகர சபையின் பின்வரும் தொடர்பு இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
தொடர்புகளுக்கு :- 024-2225555
077 7785924
செயலாளர்
வவுனியா நகர சபை
Translate »