வவுனியா நகர சபையின் 2025 ஆம் ஆண்டிற்கான வரைவு வரவு செலவுத்திட்டம் பொது மக்களின் பார்வைக்கு

வவுனியா நகர சபையின் 2025 ஆம் ஆண்டிற்கான வரைவு வரவு செலவுத்திட்டம் பொது மக்களின் பார்வைக்கு

வவுனியா நகர சபையின் 2025 ஆம் ஆண்டிற்கான வரைவு வரவு செலவுத்திட்டமானது 02.12.2024 ஆம் திகதியிலிருந்து 11.12.2024 ஆம் திகதி வரை நகர சபை அலுவலகம், பொது நூலகம் மற்றும் சன சமூக நிலையங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
குறித்த வரவு செலவு திட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்காக முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள், சபைக்குரிய வருமானங்கள் மற்றும் செலவீனங்கள் தொடர்பான அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமையினால், பொது மக்களாகிய நீங்கள் இவ் வரவு செலவு திட்டத்தினை அலுவலக நாட்களில் பார்வையிட்டு தங்களது அபிப்பிராயங்களை
செயலாளர்
நகர சபை
வவுனியா
எனும் முகவரிக்கு நேரடியாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ 12.12.2024 ஆம் திகதிக்கு முன்னர் தெரிவிக்க இயலும் என்பதனை அறியத்தருகின்றோம்.
வரவு செலவு திட்டத்தினை PDF வடிவில் கீழ்வரும் இணைப்பினை தொடர்வதன் மூலம் மும்மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
————————————————————————-
📌வருமானம் (ரூபா.)
**************
சபையின் சொந்த வருமானம் 195,842,934.64
நன்கொடைகள் மற்றும் வருமான மீள் நிரம்பல்கள் 132,668,043.00
மூலதன பெறுகைகள் 5,000,000.00
எதிர்பார்க்கப்படும் மொத்த வருமானம் 333,510,977.64
📌செலவீனம் (ரூபா.)
**************
மீண்டெழும் செலவுகள் 281,360,615.00
மூலதன செலவுகள் 52,150,000.00
எதிர்பார்க்கப்படும் மொத்த செலவீனம் 333,510,615.00

வவுனியா நகரசபை பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பாிசளிப்பு நிகழ்வு

வவுனியா நகரசபை பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பாிசளிப்பு நிகழ்வு – 2024.11.30
வாசகர்கள் , மாணவர்கள், மற்றும் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றோம்.

சீரற்ற காலநிலை தொடர்பான முக்கிய அறிவித்தல்

சீரற்ற காலநிலை தொடர்பான முக்கிய அறிவித்தல்

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்வதற்கும் துரித நடவடிக்கைகளை எடுக்கத்தக்கவாறு வவுனியா நகர சபையானது 24 மணி நேர சேவையினை வழங்குவதற்கு ஏற்றவாறு தயார்நிலையில் உள்ளது.
அந்தவகையில் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பொது பாதைகளை தடை செய்யக்கூடியவாறு ஏற்படும் வெள்ளம் மற்றும் பொது மக்களின் பயணங்களுக்கு இடையூறாக வீதிகளில் விழும் மரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்வதுடன், இவ்வாறாக அனர்த்தங்கள் ஏற்படுமிடத்து நகர சபையின் பின்வரும் தொடர்பு இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
தொடர்புகளுக்கு :- 024-2225555
077 7785924
செயலாளர்
வவுனியா நகர சபை

2025 ஆம் ஆண்டுக்கான வழங்குநர்களையும் ஒப்பந்தகாரர்களையும் பதிவுசெய்தல்

2025 ஆம் ஆண்டுக்கான வழங்குநர்களையும் ஒப்பந்தகாரர்களையும் பதிவுசெய்தல்

வவுனியா நகரசபையானது 2025 ஆம் ஆண்டுக்காக கீழ் குறிப்பிடப்பட்ட பொருட்கள், சேவைகள் மற்றும் வேலைகளை வழங்குவதற்கு தம்மை பதிவு செய்து கொள்ள விரும்பும் வழங்குநர்கள், உற்பத்தியாளர்கள், ஒப்பந்தகாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் சேவையாளர்கள் ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
1. விண்ணப்பப் படிவங்களை மீளளிக்கப்படாத வைப்புப் பணமாக ரூபா 1000.00 ஐ காசுக்கட்டளை ‘செயலாளர், நகரசபை வவுனியா’ என்ற பெயரில் அல்லது மக்கள் வங்கி, வவுனியா – கணக்கு இலக்கம் 040-100-101640520 இற்கு வைப்புச் செய்தல் அல்லது எமது அலுவலகத்தில் அலுவலக நாட்களில் 07.11.2024 முதல் 29.11.2024 வரை (மு.ப 9.00 மணி முதல் பி.ப 2.30 மணிவரை) பணத்தினை நேரடியாக செலுத்துவதன் மூலம் உரிய பற்றுச்சீட்டை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
2. விண்ணப்ப படிவங்களை கீழ்குறிப்பிடப்பட்டுள்ள மாதிரிக்கமைவாக யு4 தாளில் தயாரித்து பணம் செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டினை இணைத்தனுப்புவதன் மூலமும் பதிவினை மேற்கொள்ளமுடியும்.
3. பதிவுக்கான விண்ணப்பங்கள் யாவும் உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகளான வியாபாரப்பதிவுச் சான்றிதழ் (பிரதேச செயலகம்), வியாபார அனுமதிப்பத்திரம் (மாநகரசபை/ நகர சபை/ பிரதேச சபை) மற்றும் வரிப்பதிவுச் சான்றிதழ் (உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பின் ) என்பவற்றுடன் அனுப்பிவைக்கபடல் வேண்டும்.
4. கேள்வி கோரல்களில் பதிவு செய்யப்பட்ட வழங்குநர்களிற்கு முன்னுரிமை வழங்கப்படும். ஆயினும், போதிய பதிவு செய்யப்பட்ட வழங்குநர்கள் இல்லாத நிலையில் போட்டித்தன்மையினை கருத்தில் கொண்டு பிற மூலங்களின் ஊடாகவும் கேள்வி கோரல்களை பெற்றுக்கொள்ளவும் நகரசபை அதிகாரத்தினை கொண்டுள்ளது.
5.விண்ணப்பப் படிவங்களை நேரடியாகவோ அல்லது செயலாளர், நகரசபை, வவுனியா என்ற முகவரிக்கு தபால் மூலமோ 03.12.2024ம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறல் வேண்டும்.
6. பதிவுகள் 2025 ஆம் ஆண்டிற்கு மட்டும் செல்லுபடியானதாகும்.
7. பதிவிற்காகப் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் அல்லது திருப்திகரமற்ற விண்ணப்பங்களை நிராகரிக்கும் உரிமை நகரசபைக்கு உண்டு.
8. வடமாகாணத்தில் குறைந்தது ஒர் இடத்திலேனும் நிறுவனத்தின் ஒரு கிளை / ஒரு காட்சி அறை / அங்கீகரிக்கப்பட்ட முகவர் எதேனும் இருத்தல் வேண்டும்.
9. மேலதிக விபரங்களை அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
தொலைபேசி :- 024-2222275 / 024-2225050
மின்னஞ்சல் :- ucvavuniya@yahoo.com
இணையத்தளம் :-vavuniya.uc.gov.lk
செயலாளர்,
நகரசபை,
வவுனியா.
06.11.2024

பெறுகைகள் அறிவித்தல் – பாதுகாப்புச்சேவை 2025

பெறுகைகள் அறிவித்தல் – பாதுகாப்புச்சேவை 2025
பாதுகாப்புச் சேவை வழங்கல் – 01.01.2025 -31.12.2025
மதிப்பீடு – 27 Nos
மீளளிக்கப்படாத வைப்புத்தொகை (ரூபா) – 3000.00
மீளளிக்கப்படும் வைப்புத்தொகை (ரூபா) – 150,000.00
பெறுகை ஆவணங்கள் 07.11.2024 ஆம் திகதி தொடக்கம் 25.11.2024 ஆம் திகதி வரை அலுவலக கடமை நேரத்தில் காலை 9.00 மணி முதல் பி.ப 2.30 மணி வரை வவுனியா நகரசபையின் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
பெறுகைப் படிவங்கள் அனைத்தும் இரு பிரதிகளில் மூலப்பிரதி, நகல் பிரதி எனக் குறிப்பிட்டு அனுப்பப்படல் வேண்டும்.
சகல முத்திரையிடப்பட்ட பெறுகைகளும் ‘தலைவர், பெறுகைகள் குழு, நகரசபை, வவுனியா’. என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அல்லது நகரசபையின் செயலாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் கேள்விப்பெட்டியில் இடப்படுவதன் மூலம் 26.11.2024 மு.ப 10.30 மணிக்கு முன்னர் கிடைக்கப்பெறல் வேண்டும்.
கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் ‘பாதுகாப்புச் சேவை 2025’ என குறிப்பிடல் வேண்டும். பெறுகைகள் வைப்புத் தொகையை செலுத்தியதற்கான பற்றுச்சீட்டின் பிரதியை பெறுகைப் பத்திரத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும்.
கேள்வி கோரல் பற்றிய முன்கூட்டிய கூட்டம் 12.11.2024 ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு வவுனியா நகரசபை அலுவலகத்தில் நடைபெறும். ஆர்வமுள்ள கேள்விதாரர்கள் கலந்துகொள்ளலாம். இதற்கு எதுவித கொடுப்பனவுகளும் வழங்கப்படமாட்டாது.
பெறுகை நேரம் முடிவடைந்தவுடன் பெறுகைப்பத்திரங்கள் 26.11.2024 மு.ப 10.30 மணிக்கு திறக்கப்படும். விண்ணப்பதாரரோ அல்லது எழுத்து மூலம் நியமிக்கப்பட்ட பிரதிநிதியோ பெறுகைகள் திறக்கும் போது சமூகமளிக்கலாம். கேள்வி கோரல்களை இரத்து செய்யவோ, நிறுத்தி வைக்கவோ, பகுதியாக வழங்குவதற்கோ, புதிதாகக் கோருவதற்கோ வவுனியா நகரசபைக்கு பூரண அதிகாரமுண்டு. பெறுகை தொடர்பான பெறுகைக் குழுவின் தீர்மானமே இறுதித் தீர்மானமாகும். மேலதிக விபரங்களை 024-2225050 அல்லது 024-2222275 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
செயலாளர்
நகரசபை,
வவுனியா

2025 ஆம் ஆண்டுக்கான கேள்வி அறிவித்தல்

2025 ஆம் ஆண்டுக்கான கேள்வி அறிவித்தல்

வவுனியா நகரசபை அதிகார எல்லைக்குட்பட்ட கீழ்காணும் குத்தகை நிலையங்களை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம்; திகதி தொடக்கம் 2025 டிசெம்பர் 31 ஆம் திகதி வரை குத்தகைக்கு விடுவதற்கான கேள்விகள் கோரப்படுகின்றன.
கேள்விப்பத்திரம் வழங்கும் காலம் :- 07.11.2024 – 19.11.2024 ( மு.ப 9.00 -பி.ப.-2.30 வரை)
கேள்விப்பத்திரம் ஏற்கும் இறுதித்திகதி :- 21.11.2024 மு.ப.11.00 மணி வரை
கேள்விப்பத்திரம் திறக்கப்படும் திகதி :- 21.11.2024 மு.ப. 11.00.
கேள்விப்பத்திரம் திறக்கப்படும் இடம் :- நகரசபை மண்டபம்
கேள்வி படிவக்கட்டணமாக ரூபா 3000.00 ம் , அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மீளளிக்கக்கூடிய வைப்புத் தொகையினையும் செலுத்தி படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.
கேள்விப்பத்திரங்கள் மூலப்பிரதி மற்றும் நகல்பிரதி என இரண்டு பிரதிகள் தனித்தனியான உறைகளில் இடப்பட்டு, இரண்டையும் ஒரு கடித உறையிலிட்டு அரக்கு முத்திரை இடப்பட்டு ‘செயலாளர் , நகரசபை ,வவுனியா’ என்ற முகவரிக்கு பதிவுத்தபால் மூலம் அல்லது சபையில் வைக்கப்பட்டுள்ள கேள்விப்பெட்டியில் இடப்படல் மூலம் 2024.11.21 ம் திகதி முற்பகல் 11.00 மணிக்கு முன் கிடைக்கப்பெறல் வேண்டும். கேள்விப்படிவங்கள் அடங்கிய கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் கேள்விகோரும் நிலையத்தின் பெயர் குறிப்பிடப்படல் வேண்டும்.
மேற்படி கேள்வி கோரப்படும் நிலையங்களுக்குரியதான வியாபாரங்கள் யாவும் குறித்த இடத்திலேயே நடாத்தப்பட வேண்டும் என்பதுடன் தற்போதைய வசதிகள் மற்றும் நிலைமையின் அடிப்படையிலேயே கேள்வி கோரப்படுகிறது கேள்வியினை ஏற்க அல்லது நிராகரிக்கும் உரிமை நகரசபைக்குண்டு. மேலும், இக்கேள்விகள் சம்பந்தமாக மேலதிக விபரங்களை எமது அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம். அல்லது தொலைபேசி இல: 0242222275. அல்லது 0242225050 உடன் தொடர்பு கொள்ள முடியும்.
செயலாளர்
நகரசபை,
வவுனியா.
Translate »