தேசிய வாசிப்பு மாத பாிசளிப்பு விழா- 2024
நகரசபை பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாத பாிசளிப்பு விழா 30.11.2024 சனிக்கிழமை, மு.ப. 9.00 மணிக்கு நகரசபை கலாசார மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது. இந் நிகழ்வானது சபையில் செயலாளர் திரு. அ.பாலகிருபன் அவர்கள் தலைமையில். பிரதமவிருந்தினராக திரு. இ. பிரதாபன் (பிரதேச செயலாளர்- வவுனியா) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. தெ. ரதீஸ்வரன் (உள்ளூராட்சி உதவி ஆணையாளர்- வவுனியா) அவா்களும், ஏனைய சபைகளின் செயலாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள், வாசகர்கள், மற்றும் பெற்றோர், மாணவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.