


உலக தூய்மைப்படுத்தல் தினத்தினை முன்னிட்டு 15.09.2023 ஆம் திகதி எமது சபையினால் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற உக்காத கழிவுகளை சேகரித்து சுற்றாடலை தூய்மையாக்கும் செயற்றிட்டம் எமது சபையினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.
இத்தூய்மையாக்கும் பணியில் எமது சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள் இணைந்து தமது பூரண ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர்.
அந்த வகையில் 15.09.2023 திகதி வெள்ளிக்கிழமை வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியிலிருந்து தாண்டிக்குளம் யு9 வீதி வரையுள்ள வீதியின் இருபுறமும் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் போன்ற உக்காத கழிவுகள் எமது சபை கழிவகற்றல் வாகனங்களில் தரம்பிரித்து சேகரிக்கப்பட்டன.
இப்பணியில் சமூகப்பொறுப்புணர்வுடன் பங்கெடுத்த அனைத்து உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் சபை சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
பொலித்தீன் பிளாஸ்ரிக் பாவனையைக் குறைத்து பொறுப்புடன் சூழல் நலம் காப்போம்