











இந்நிகழ்வில் 34 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான இணையத்தளங்கள் வட மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால் உத்தியோக பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இவ் இணையத்தளத்தினை சிறப்புற வடிவமைத்த உத்தியோகத்தர்கள் பிரதம செயலாளர் அவர்களால் மெச்சுரை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ் அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர்,உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்,வட மாகாணத்தின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், சபையின் செயலாளர்கள், UNDP நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வவுனியா நகர சபைக்குரிய www.vavuniya.uc.gov.lk
எனும் இற்றைப்படுத்தப்பட்ட இணையத்தளமானது நேற்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. எமது சபைக்கான இணையத்தளத்தினை எமது சபையின் உத்தியோகத்தர்களாகிய திரு.த.பிருந்தாபன் மற்றும் செல்வி .ப.தயாழினி ஆகியோர் வடிவமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த இணையத்தளம் ஊடாக, பொது மக்கள் நகர சபையின் சேவைகள் தொடர்பில் முழுமையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.எதிர்வரும் காலங்களில் குறித்த இணையத்தளம் ஊடாக நகர சபைக்குரிய அனைத்து சேவைகளையும் மக்கள் பெற்றுக்கொள்ளக்கூடியவாறாக, இதனை முழுமைப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.அந்த வகையில் இவ் இணையத்தள வடிவமைப்பிற்கு அனுசரனை வழங்கிய CDLG திட்டக்குழுவினருக்கும் இதனை வெற்றிகரமாக வடிவமைத்த எமது சபையின் உத்தியோகத்தர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.